9/2/10

சாலை போர் ....



அழகிய காலை பொழுது !!!குழந்தைகள்  பள்ளிக்கு , பெண்கள் சமையல் அறையில் வெந்து கொண்டு இருகின்றனர் .
ஆண்கள் தங்களுக்காகவே செய்தி தாள்  எழுதியது போல படித்து கொண்டிருகின்றனர்.  எல்லோரும் இயந்திரம் போல
சுழன்று கொண்டே இருக்கின்றனர்.அடுத்து அவரவர் அவர்கள்   வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது .

சாலையில் எல்லோருமே போக வேண்டியுள்ளது ..அது ஒரு பெரிய கொடுமை தெரியுமா ?

சாலையில் போனால் வீடுக்கு வருவோமா என்பது பெரிய கேள்விக்குறியே ....ரேஸ் கு போக வேண்டியவர்கள் ellam சாலையில் தான் பயிற்சி எடுகின்றனர் போலும் ..யாரை முந்தலாம் ..யாரை கீழே தள்ளலாம் என்று.
ஒரு நாள் நான் கூட எனது வண்டியில் ஒட்டி கொண்டு போகும் போது தப்பி பிழைத்தேன் ..ரொம்ப ஆயுள் போல எனக்கு ...சிக்னல் என்று உள்ளதையே நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். சிவப்பு நிறம் வந்தால் தான் போவேன் என்று
எத்தனை பேர்  அடம் பண்றாங்க தெரியுமா ? நம்ம அரசு பேருந்துக்கு தான் இதில் முதல் இடம் ..யாரையுமே கண்டு கொளவதில்லை ..இதனால் எவ்வளவு விபத்துகள் ??? அது போல இரண்டு சக்கர வகனங்களும்  சிக்னல் என்றாலும்
இரண்டு விளகுகலையும் எரிய விட்டு நான் பொய் கொள்கிறேன் என்றே வருகின்றனர்.

அதிலும் நம்ம டிராபிக் போலீஸ் இருக்கிறாரே ...." இருப்பார் ஆனால் இல்ல ..." ரொம்பவே வெட்டியாக நின்று கொண்டிருபார்...அதனால் நம்மை நம் தான் பார்த்து கொள்ளனும்..கவனம் பொறுமை ரெண்டும் மிக அவசியம் ...
பொறுமை என்பது எல்லோருக்குமே
அவசியம் ..எனக்கும் குறைவு தான் .ஆனால் முக்கியமான  நேரங்களில் பொறுமை அவசியமே ...

.ஒரு சில நிமிடங்கள் தான் காத்திருக்கணும் ..காத்திருக்கலாமே !!!! ஒரு சில நொடிகளில் வாழ்கையே மாறி போகலாம் ..

சிக்னல்  பார்த்து  போங்க ....
ஆயிளோடு   இருங்க ...
மத்தவங்களுக்கும்  ஆயுசை குடுங்க ...

1 comment: