நிறைய தடவை எதாவது ஒன்றிற்காக ஷாப்பிங் போயிருப்போம் .ஆனால் அதை வாங்கவே மறந்துபோய் தேவை இல்லாத நிறைய பொருட்களை வங்கி வந்திருப்போம் .சரி நான் இப்போ சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன் ..ஒரு நாள் இப்படி ஷாப்பிங் போன பொழுது நான் புடவை செலக்ட் பண்ணிக்கிட்டு இருந்த பொழுது என் இரு பிள்ளைகளும் என் பக்கத்தில் இருந்து விளையாடி ஒண்டு இருந்தனர் .கடையிலோ நிறைய கூட்டம் தான் .என் கணவர் என் கிட்டே இருந்து தப்பி எங்கோ போய் விட்டார் அந்த நேரத்தில் ...என் மகன் அப்பொழுது தெரியாமல் பக்கத்தில் இருந்த பெண்மணியின் காலில் மிதித்து விட்டன் ..ஒரு கல்லூரி மாணவி மாதிரி தான் இருந்தது ..என் மகன் இரண்டாவது படிக்கிறான் .அவன் கூட சாரி ஆண்ட்டி!! சாரி ஆண்ட்டி !! என்று பணிவாக சொல்கிறான் .அதற்கு அந்த பெண் ஷிட் ஷிட் என்று அவ்வளவு ஒரு கோர முகத்துடன் என் மகனிடம் கடிந்து கொள்கிறாள் .என் மனதால் தங்கவே முடியவில்லை ..இவ்வளவு படித்து என்ன பயன் ? இரண்டாவது படிக்கும் என் மகனுக்கு தெரியும் பண்பு கூட இருபது வயதை கடந்திருக்கும் அந்த பெண்மணிக்கு புரியவில்லை .பண்புகள் இயல்பாகவே வரும் .வளர்ப்பில் வரணும் .அந்த பெண்மணியின் அறியாமை என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் !!
அது போல இன்றைய சூழ்நிலையில் நிறைய குழந்தைகளை மாடர்ன் ஆக வளர்க்கிறேன் என்று நிறைய பெற்றோர்கள் அடிப்படை பண்புகளை சொல்லி தர மறந்து விடுகிறார்கள் .கிராமத்தில் பிள்ளைகளுக்கு முறை சொல்லி கூப்பிட சொல்லி தறாங்க அம்மாக்கள் .அத்தை ,சித்தி ,சித்தப்பா ,மாமா என்று !!! பெரிய ஊர்களில் எல்லாம் எல்லோரும் அங்கிள் ..எல்லோரும் ஆண்ட்டி தான் ..ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ? என்னோட பிள்ளைகளும் அபப்டி தான் .பிள்ளைகள் தனியாகவே வளர்கிறார்கள் .அதனால் சொந்தங்களை பற்றி தெரியல ..அம்மா அப்பா தான் சொல்லி தரனும் .பாட்டி தாத்தா பெயர் கூட தெரிவதில்லை .கூட்டு குடும்பம் என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியம் இல்லை தான் .இருந்தாலும் சொந்தங்களை உறவுகளை பாசங்களை சொல்லி தந்தே ஆகணும் .அது நமது கடமை ஆகும் ..