11/27/10

மெகா சீரியலும் நம் மக்களும் !!!




அயோ !!! எதோ கருகிறே வாசம் வருதே !!! என்று மகன் சொல்ல அம்மா அதை கூட கண்டு கொள்ளாமல் 
எங்கேயோ மூழ்கிக்கொண்டு  இருந்தார் ..எங்கு தெரியுமா மெகா சீரியல் என்னும் மெகா கடலில் !!!
இன்று மெகா சீரியல் பார்க்காமல் இருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .. அந்த ஒரு சிலரில் நானும் ..கொஞ்சம் ஓவர் அஹ தான் இருக்கோ ? .நானும் பார்த்திருக்கேன் சீரியல் ...சித்தி ,மெட்டி ஒலி என்று வெறுத்து போய்  விட்டு விட்டேன் 
சின்ன பிள்ளைகள் கூட மெகா சீரியல் பார்கிறாங்க ..நிறைய காட்சிகள் அருவருக்க வைக்கின்றன .மயங்கி விழுந்தாலே கர்ப்பம் தான்  என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு கூட  தெரியுது .


மேலும் முந்தைய காலத்தில் எல்லாம்  பிரெஷ்  அக  சமையல் எல்லாம் செய்தாங்க .. அந்த மைக்ரோ வாவ்  யாரு கண்டு பிடிச்சாங்களோ ....அதில் இருந்து சூடு பண்றது ஈசி யா போச்சு ...
அடுத்து மெகா சீரியல் பத்தி சொல்லணும்னா நிறைய பேருக்கு ரெண்டு மனைவி இருப்பாங்க..இல்லனா ரெண்டு புருஷன் இருபங்க  

இதை விட கொடுமை என்னன்னா ? முதல் மனைவியின் பொண்ணுக்கு சித்தி யை தான் ரொம்ப பிடிக்குமாம் .என்ன கொடுமை டா சாமி ? அது போல விஷம் வைக்கிறது ...பில்லி சூனியம் வைக்கிறது எல்லாமே சொல்லி கொடுகிரங்க.

ஒரு நடிகர் நடிகையின் கால் சீட்  கிடைக்கலனா அவங்களை கொன்று விடுவாங்க தெரயுமா? ஒரே நடிகையே நிறைய சீரியல் இல் வருவதால்  எங்க பாட்டி குழம்பி போய் இருபங்க சில நேரங்களில் ...
இவ ஏன் இங்கே வந்திருக்க என்று ..

இப்படி நிறைய பேர் மனதில் நீங்க இடம் பிடித்து .கொண்டு இருக்கிறது ..அதனால் எதுவுமே பயன் இல்ல ...மனம் நிம்மதியாக இருக்க தான் டிவி  பார்க்கிறோம் ..பார்ப்பதனால் நிறைய கேட்ட எண்ணங்களே மனதில் தோன்றுகின்றன என்பதை  மறுக்கவே முடியாது ...


அடுத்து ஒரு நிகழ்ச்சி .." நடந்தது என்ன ? " ..நிறைய நல்ல தொகுப்புகள் இருக்கின்றன சில வேளையில்...பேய் ஆவி போன்ற நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் தவிர்க்கலாம் இல்லையா ? 

எனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று சொன்னால் " airtel   சூப்பர் சிங்கர் தான் .மனதை மயக்கும் பாடல்கள் ...நல்ல அறிவுரைகள் படுவர்களுக்கு ...எனக்கு பிடித்தால் அதை பார்க்க சொல்லவில்லை ...இருந்தாலும் ரிலக்ஸ் பண்ணும் நிகழ்சிகளை  பார்க்கலாம் .சீரியல் இல் அவங்களும் அலுரங்க ..நம்மளும் அழ வைகிரங்க..தேவையா ???





.

11/16/10

செல்லமே !!!





என் மகளின் வயதில் நான் இல்ல விட்டாலும் ....
என் மகள் கூட விளையாடும் போது நானும் சின்ன குழந்தை தான் .என் மகளுக்கும்   எனக்கும் ...நிறைய நேரங்களில்  சண்டை தான் .செல்ல கோபங்கள். சாப்பிட மிகவும் அடம் தான் ..சாப்பிடாமல் விட மனம் கேட்காது .அப்படி இருக்க  ஒரு யோசனை வந்தது ..என்ன பண்ணலாம் ??சின்ன பிள்ளைகளை கை ஆள்வது மிகவும் கஷ்டம் என்றே எண்ணி இருந்தேன் .ஆனால் நிறைய  ஐடியா இருக்கு.அவங்களை நம் வசம் கொண்டு வர .
அவர்களை மிரட்டினால் சொன்னதை  கேட்கவே மாட்டங்க.அவங்க போக்கில் தான் சொல்லணும் ..அதாவது கொஞ்சம் ஐஸ் வைக்கணும் ..நீ குட்டி பிள்ளையில் இப்படி பண்ணுவே ...அப்படி பண்ணுவே என்று சொன்னால் நாம் காரியம் சாதிக்கலாம் .

இப்படி நிறைய முறை என் மகளை என் வசம் கொண்டு வந்திருக்கேன் .குறிப்பாக அவர்களின்  சிறு வயதில் உள்ள புகை படங்களை காட்டலாம் ..அவங்க பண்ணினே குறும்புகளை சொல்லலாம் . சொன்னதையே திருப்பி திருப்பி வேற சொல்ல வேண்டியது வரும் .நமக்கு வேண்டியது சாப்பாடு உள்ளே போகணும் .அவ்வளவு தானே ..சில நேரங்களில் எனக்கே போர் அடிப்பதுண்டு .இருந்தாலும் சொல்லுவேன் ..

இன்னொரு விஷயம் ...குழந்தைகளிடம் நிறைய பாசங்கள் இருக்கும் .அது வெளிபடையாக தெரியாது ..ஆனால் வெளிப்படும் நேரம் வெளிப்படும் ..குழந்தைகள் காய்ச்சலில் படுத்தால் நான் பார்த்து  கொள்கிறேன் .நான் காய்ச்சலில் இருக்கும் போது அவள் கண்களில் உள்ள வருத்தம் நான் அறிவேன் .

பாசம் கட்டும் இடத்தில கோபமும் வந்து விடுகிறது .நான்  சோர்வாக இருக்கும் நேரங்களில் சேட்டை பண்ணும் போது அடித்து விடுகிறேன் 
பின்னர் அழுதுகொண்டே தூங்கும் அவளை கொண்டு நானும் அழுகிறேன் .இப்படி தானே என்னையும் என் அம்மா வளர்த்திருப்பார்கள் .

ஒவ்வொவொரு முறை அவள் செய்யும் சேட்டையையும் ரசிக்க கற்று கொள்கிறேன் ...இதை ரசிக்க கடவுள் எனக்கு வாய்பளிதிருகிறார் என்றே !!! என் செல்ல மம்மி!!! என்று அவள் சொல்லும் போது கிடைக்கும் சந்தோசதிருக்கு அளவே கிடையாது !!!


மழலை ஒன்று 
இருந்தால் ....
எந்த பாலைவனமும் 
சோலை வனம் தான் !!!



11/4/10

என் சிறு வயதில் தீபாவளி !!!





சிறு வயதில் தீபாவளி என்றால் ஒரு மாசத்திருக்கு முன்பே எப்போ வருது ? எத்தனை நாள் லீவ் என்றெல்லாம் பார்க்கும் ஆர்வம் ..என்ன டிரஸ் வாங்கலாம் ..அதற்கு மேட்ச் ஆஹா வளையல் ,செயின் ,கம்மல்  எல்லாம் வாங்கும் வழக்கம் .தீபாவளிக்கு பலகாரங்கள் சுடும் போதே டேஸ்ட் பண்ணி அது சரி இல்ல இது சரி இல்ல என்று நிறைய முறை சொல்லிருக்கேன் .எங்க அம்மாவும் அதை சரி பண்ணுவாங்க .இரவில் விழித்திருந்து கோலங்கள் போட்டு தான் தூங்குவோம் ..காலை தூக்கம் எவ்வளவு சுகம் தெரயுமா? இன்னும் குளிக்காமல் என்ன பண்றே என்று வாங்கும் திட்டுகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றது.சீயகயும் எண்ணெயும் ரெடி அக இருக்கும் . நன்கு குளித்துவிட்டு ..சாப்பிட வருகையில் இட்லி கூட கைமா குருமாவும் மணக்குமே .....அயோ ரொம்ப சூப்பர் தெரயுமா ?

ஒரு பிடி பிடித்து விட்டு ...புது டிரஸ் போட்டுகிட்டு வெளியில் வருகையில் என் மனதில் இருக்கும் சந்தோசம் நிறைய !!! ஒரு 100  

வாலா சரவெடி வெச்சுட்டு " ஹாப்பி தீவாளி " என்று சொல்லி கொண்டாடிய நாட்கள் மறக்கவே முடியாது ..ஆசை தீர வெடித்து விட்டு எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு ...நல்ல மதிய உணவை சாப்பிட்டு  விட்டு ..ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு
மாலை மறுபடியும் இன்னொரு புது டிரஸ் போட்டுகிட்டு ..கலர் கலர் மத்தாப்புகள் போட்டு ..வானம் ஜொலிப்பதை கண்ட நாட்கள் மிகவும் அருமையான நாட்கள் ...

இன்று ...நிறைய பொறுப்புகள் ..என் அம்மா செய்த எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டிருக்கு .நானே பலகாரங்கள் பண்ணி நானே சாப்பிட வேண்டிருக்கு .அன்று என்னை சாப்பிட வைக்க கெஞ்சிருகாங்க..இன்று என் மகளை !!! நான் குறை சொன்ன காலங்கள்  
சாப்பாட்டின் மீது ..இன்று என் மகள் சொல்கிறாள் ..வாழ்கையில் எவ்வளவு சுழற்சிகள் ...அது போலவே நிறைய கஷடங்கள் வாழ்கையில் வரும் அனால் கடந்து போகும் ..ஒரு கஷ்டம் என்றால் அதன் பின் சந்தோசமே !! 

இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைய 
நல் வாழ்த்துக்கள் !!!