10/14/10

மீன் குழம்பு ..( ஆற்று மீன் )

 


விரால் மீன் --  ஒரு கிலோ

சாம்பார் வெங்காயம் -- 10 உரித்து முழுசாக

வற்றல் ---  10

சீரகம் -- 8 ஸ்பூன் .

புளி - கால் கப் கரைத்தது .




செய்முறை :

---------------------



*  வற்றல் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .

( அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவை .)


*  புளி கரைத்தது ,மசாலா அரைத்தது இரண்டையும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலக்கவும்


*சாம்பார் வெங்காயத்தை தட்டி எடுத்து கொள்ளவும் .


* அதையும் மசாலா கலவையில் சேர்க்கவும் .


*100 ml நல்லெண்ணெய் சேர்க்கவும் கலவையில்


* தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்


* மஞ்சள் தூள் சேர்க்கவும் .


* உப்பு சேர்க்கவும் .


* எல்லவற்றையும் கைகளால் நன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும் .


* நன்றாக கொத்தி வந்ததும் சிம் இல் வைத்து .சிறிது எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும் .


* 5 mins கழித்து அடுப்பை அணைக்கவும் .


* மீன் குழம்பு ரெடி .


( இந்த மீன் குழம்பு முறை ...விருதுநகர் ஸ்பெஷல் .தேங்காய் சேர்க்காமல் செய்வது .வித்தியாசமான ஒன்று .மறு நாள் வரை கெடாமல் இருக்கும் .மறு நாள் சாப்பிடும் போது கூடுதல் சுவை தாங்க !!!!)




 

 

3 comments:

  1. சப்புக்கொட்ட வைக்குது மீன் குழம்பு.

    ReplyDelete
  2. hmmmm.. I love cooking.. I will surely try this recipe.. Thank u so much.. :) :)
    Lancy from chennai

    ReplyDelete